உதவிகள் ...

ஏழைச் சகோதர சகோதரிகளின் வாழ்க்கையை மேம்படுத்த செய்யப்படும் வாழ்வாதார, மருத்துவ, கல்வி மற்றும் நிதி உதவிகள்.

தெருமுனை பிரச்சாரங்கள் ...

மார்க்கம் மற்றும் சமுதாயம் பற்றி மக்கிளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த செய்யப்படும் தெருமுனை மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள்.

ஏழைகளுக்கு ஃபித்ரா விநியோகம் ...

ஏழை முஸ்லிம்களும் மகிழ்வுடன் நோன்பு பெருநாளை கொண்டாட பித்ராவை நபிவழிப்படி கூட்டாக வசூலித்து ஏழை மக்களை தேடிச் சென்று விநியோகித்தல்.

நல்லொழுக்க பயிற்சி முகாம்கள் ...

மார்க்கம் மற்றும் நிர்வாகம் போன்றவற்றை விளங்கி செயல்படுத்திட நல்லொழுக்க பயிற்சி முகாம்கள்.

பெருநாள் தொழுகைகள் ...

TNTJ ஆவணியாபுரம் - ஆடுதுறை கிளையின் சார்பாக நடைபெற்ற ஈகை மற்றும் நோன்புப் பெருநாள் தொழுகைகள்.

Sunday, October 28, 2012

கூட்டு குர்பானி - 2012

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் - ஆடுதுறை கிளையின் சார்பாக சென்ற 28-10-2012 ஞாயிற்றுக்கிழமையன்று கூட்டுக் குர்பானியில் 14 மாடுகள் குர்பானி கொடுக்கப்பட்டது.

இதில் 200 பொட்டலங்கள் போடப்பட்டு ஏழைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!    

குர்பானி பிராணிகளின் தோல்கள்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் - ஆடுதுறை கிளையின் சார்பாக சென்ற 28-10-2012 ஞாயிற்றுக்கிழமையன்று மர்க்ஸிற்கு 52 குர்பானி ஆட்டுத் தோள்களும் 1 மாட்டுத் தோலும் வந்ததது.

இதை முறையாக விற்று தொகையை கிளையின் ஜகாத் நிதியில் சேர்க்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!  

Saturday, October 27, 2012

ஈகைப் பெருநாள் - 2012


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் - ஆடுதுறை கிளையின் சார்பாக சென்ற 27-10-2012 சனிக்கிழமையன்று ஆவணியாபுரம் புதுத் தெரு திடலில் ஈகைத் திருநாள் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

இதில் சகோதரர் முஜிபுர்ரஹ்மான் அவர்கள் தொழுகை நடத்தி சிறப்புரையாற்றினார்கள். இதில் ஆண்கள் பெண்கள் என பலர் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நபி வழியில் நிறைவேற்றினர். அல்ஹம்துலில்லாஹ் !!  


Sunday, October 21, 2012

கோவிந்தபுரத்தில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் ஆடுதுறை கிளையின் சார்பாக சென்ற 21-10-2012 ஞாயிற்றுக்கிழமையன்று கோவிந்தபுரம் இக்பால் தெரு SMS நகரில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி சபுர் நிசா ஆலிமா அவர்கள் குர்பானியின் சட்டங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். உள்ளூர் சகோதரிகள் பலர் கலந்து கொண்டு பயனடைதனர். அல்ஹம்துலில்லாஹ் !!    

Sunday, October 7, 2012

வாழைக்கொல்லைத் தெருவில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் ஆடுதுறை கிளையின் சார்பாக சென்ற 07-10-2012 ஞாயிற்றுக்கிழமையன்று வாழைக்கொல்லைத் தெரு சகோதரர் பாரூக் அவர்கள் வீட்டில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி சபுர் நிசா ஆலிமா அவர்கள் சமுதாயத்தில் இன்றைய பெண்களின் நிலை என்ற தலைப்பிலும் சகோதரி ஜாஸ்மின் ஆலிமா அவர்கள் தொழுகை என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். உள்ளூர் சகோதரிகள் பலர் கலந்து கொண்டு பயனடைதனர். அல்ஹம்துலில்லாஹ் !!