உதவிகள் ...

ஏழைச் சகோதர சகோதரிகளின் வாழ்க்கையை மேம்படுத்த செய்யப்படும் வாழ்வாதார, மருத்துவ, கல்வி மற்றும் நிதி உதவிகள்.

தெருமுனை பிரச்சாரங்கள் ...

மார்க்கம் மற்றும் சமுதாயம் பற்றி மக்கிளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த செய்யப்படும் தெருமுனை மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள்.

ஏழைகளுக்கு ஃபித்ரா விநியோகம் ...

ஏழை முஸ்லிம்களும் மகிழ்வுடன் நோன்பு பெருநாளை கொண்டாட பித்ராவை நபிவழிப்படி கூட்டாக வசூலித்து ஏழை மக்களை தேடிச் சென்று விநியோகித்தல்.

நல்லொழுக்க பயிற்சி முகாம்கள் ...

மார்க்கம் மற்றும் நிர்வாகம் போன்றவற்றை விளங்கி செயல்படுத்திட நல்லொழுக்க பயிற்சி முகாம்கள்.

பெருநாள் தொழுகைகள் ...

TNTJ ஆவணியாபுரம் - ஆடுதுறை கிளையின் சார்பாக நடைபெற்ற ஈகை மற்றும் நோன்புப் பெருநாள் தொழுகைகள்.

Wednesday, August 31, 2011

நோன்புப் பெருநாள் - 2011


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் ஆடுதுறை கிளையின் சார்பாக நோன்புப் பெருநாள் தொழுகை நபி வழியில் புதுத் தெரு திடலில் நடைபெற்றது.


இதில் சகோதரர் இமாம் அலி அவர்கள் பெருநாள் உரையாற்றினார்கள். ஆண்கள் பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ் !!




ஃபித்ரா விநியோகம் - 2011


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் ஆடுதுறை கிளையின் சார்பாக 1,11,740 ரூபாய்க்கு பித்ரா விநியோகம் செய்யப்பட்டது.


உள்ளூர் வசூல்86,240
U.A.E. சகோதரர்கள்12,000
மாநில தலைமை8,000
கத்தார் சகோதரர்கள்2,500
ஃபிரான்ஸ் சகோதரர்கள்3000
மொத்தம்1,11,740

ரூபாய் 453/- மதிப்பிலான பொருட்கள்(மளிகை மற்றும் ஆடு இறைச்சி) ஆவணியாபுரம், ஆடுதுறை, S .புதூர், திருநீலக்குடி மற்றும் திருமளைராஜபுரம் ஆகிய ஊர்களை சேர்ந்த 245 ஏழை குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.

மீதமான தொகை ரூபாய் 755/- திருமங்கலக்குடி கிளைக்கு கொடுக்கப்பட்டது.

Sunday, August 14, 2011

ரூபாய் 2000/- மருத்துவ உதவி !!!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் ஆடுதுறை கிளையின் சார்பாக சென்ற 14-08-2011 ஞாயிற்றுக்கிழமை அன்று கிட்னி பாதிக்கப்பட்ட ஏழை சகோதரருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 2000/- வழங்கப்பட்டது.

Monday, August 8, 2011

ஏழைச் சகோதரருக்கு தையல் இயந்திரம் !!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் ஆடுதுறை கிளையின் சார்பாக சென்ற 25-06-2011 சனிக்கிழமை அன்று முத்தூரை சேர்ந்த ஏழைச் சகோதரருக்கு ஜகாத் நிதியிலிருந்து ஒரு தையல் இயந்திரம் வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!!