உதவிகள் ...

ஏழைச் சகோதர சகோதரிகளின் வாழ்க்கையை மேம்படுத்த செய்யப்படும் வாழ்வாதார, மருத்துவ, கல்வி மற்றும் நிதி உதவிகள்.

தெருமுனை பிரச்சாரங்கள் ...

மார்க்கம் மற்றும் சமுதாயம் பற்றி மக்கிளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த செய்யப்படும் தெருமுனை மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள்.

ஏழைகளுக்கு ஃபித்ரா விநியோகம் ...

ஏழை முஸ்லிம்களும் மகிழ்வுடன் நோன்பு பெருநாளை கொண்டாட பித்ராவை நபிவழிப்படி கூட்டாக வசூலித்து ஏழை மக்களை தேடிச் சென்று விநியோகித்தல்.

நல்லொழுக்க பயிற்சி முகாம்கள் ...

மார்க்கம் மற்றும் நிர்வாகம் போன்றவற்றை விளங்கி செயல்படுத்திட நல்லொழுக்க பயிற்சி முகாம்கள்.

பெருநாள் தொழுகைகள் ...

TNTJ ஆவணியாபுரம் - ஆடுதுறை கிளையின் சார்பாக நடைபெற்ற ஈகை மற்றும் நோன்புப் பெருநாள் தொழுகைகள்.

Saturday, November 20, 2010

ரூபாய் 2070/- மருத்துவ உதவி !!!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் - ஆடுதுறை கிளையின் சார்பாக நரசிங்கம்பேட்டையை சேர்ந்த சகோதரரின் அறுவை சிகிச்சைக்காக ரூபாய் 2070/- ஜும்மாவில் வசூல் செய்து மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது.

Thursday, November 18, 2010

ஈகைப் பெருநாள் - 2010

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆவணியாபுரம் - ஆடுதுறை கிளையின் சார்பாக 18/11/2010 வியாழக்கிழமை அன்று ஆவணியாபுரம்  தவ்ஹீத் ஜமாஅத் மர்கசில் ஈகைத் திருநாள் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

சகோதரர் ரில்வான் அவர்கள் தொழுகை நடத்தி சிறப்புரையாற்றினார்கள்.










இதில் ஆண்கள் பெண்கள் என பலர் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நபி வழியில் நிறைவேற்றினர்.