Monday, February 14, 2011

மவ்லிதை கண்டித்து தெருமுனை பிரச்சாரம் !!!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம்-ஆடுதுறை கிளையில் மவ்லித் மாதமான(?) ரபியுல் அவ்வல் மாதத்தில் மவ்லித்களையும் மீலாது விழாக்களையும் எதிர்க்கும் முகமாக, விழிப்புணர்வு பிரச்சாரம் கடந்த 13.02.2011 ஞாயிறன்று இரவு மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது.

ரியாத் மண்டல செயலாளர் சகோ. ஃபெய்ஸல் அவர்கள் “இஸ்லாத்தின் அடிப்படை” என்ற தலைப்பில் சிற்றுரை ஆற்றினார்.

அதனை அடுத்து, மாவட்ட துணைச் செயலாளர் சகோ. மன்சூர் அலி அவர்கள் “மவ்லிதும் இணைவைப்பும்” என்ற தலைப்பில் குர்ஆன் – ஹதீஸ் ஒளியில் சிறப்புரை ஆற்றினார்.


அதிக அளவில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் கலந்து கொண்டனர். மேலும், பலர் வீடுகளிலிருந்து பிரச்சாரத்தை கேட்டு பயன் பெற்றனர்.

கிளை நிர்வாகிகள் சிறப்பாக ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

0 comments:

Post a Comment